உள்நாட்டு செய்திகள்

சம்பூர், கடற்பிரதேசத்தில் சுமார் 05 கிலோவுக்கும் அதிகமான ஹெரோய்ன்…


திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 05 கிலோவும் 550 கிராம் நிறையுடைய 21 ஹெரோய்ன் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பெறுமதி சுமார் 66 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இவை கண்டெடுக்கப்பட்டதாகவும், வௌிநாட்டிலிருந்து கெண்டு வந்து விநியோகத்திற்காக இவற்றை புதைத்து வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

R.Rishma

Related posts

மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு

Azeem Kilabdeen

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் ரூ.100 மில்லியன் கோரி நாமல் வழக்குத் தாக்கல்.

wpengine

இந்திய அணிக்கு 217 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை..

wpengine