Top Story 1உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயு விலை குறைவினால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
சமையல் எரிவாயு விலை குறைவினால் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிவாரணம் கிடைக்காது என்பதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன கூறினார்.

எரிவாயுவைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கும் பேக்கரிகளில் இருபத்தைந்து சதவீதத்திற்கும் குறைவான பேக்கரிகள் இருப்பதாகவும், மீதமுள்ள பேக்கரிகள் அனைத்தும் டீசல், விறகு மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதால், ஒட்டுமொத்த பொருட்களின் விலையை குறைக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போது பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினர் அறிக்கை விடுத்துள்ள போதிலும், எரிவாயு விலை அதிகரிப்பின் அடிப்படையில் உணவுப் பொருட்களின் விலைகளை சங்கம் ஒருபோதும் அதிகரிக்கவில்லை எனவும் தலைவர் வலியுறுத்தினார்.

Related posts

T20 தொடரில் நியூசிலாந்துடன் மோதவிருக்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

wpengine

ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமருக்கு இடையே தொலைபேசி கலந்துரையாடல்…!!!

wpengine

உயர்தரப்பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி எண்கள்

wpengine