உள்நாட்டு செய்திகள்

சந்தித்த துன்புறுத்தல்கள் இனியும் வேண்டாம் – SLPP பேரணிகளில் SLFP பங்கேற்காது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இடையே உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ள போதும், பொதுஜன முன்னணியின் தேர்தல் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பங்கேற்காது என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இறுதியாக இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அவர்,
“பொதுஜன முன்னணியின் பேரணிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சந்தித்த துன்புறுத்தல்களை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் 5,000 கூட்டங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் வீடு வீடாகச் சென்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பரப்புரை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், நாங்கள் பொதுஜன முன்னணியின் மேடையில் அவர்களுடன் இணைந்து ஏறுவதற்கு தயாரில்லை. நாங்கள் அடிமட்டத்தில் இருந்து பணியாற்றுவோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

UPDATE – கேகாலை, புலத்கோபிட்டிய மண்சரிவு – மூவரின் சடலங்கள் மீட்பு

wpengine

ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பேரால் அரசியல் செய்து சமூகங்களை பிளவுபடுத்துகின்றனர் – பிள்ளையான்..!

wpengine

ஜனாதிபதித் தேர்தல் – 80 வீதமான வாக்கு பதிவுகள்

wpengine