விளையாட்டு

சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி



(ஃபாஸ்ட் நியூஸ் |இந்தியா) – சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை உள்ளது.

இந்த ஒலிம்பிக்கில் விளையாட ஏற்கனவே சென்னையைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தகுதி பெற்றுள்ள நிலையில் இப்போது மற்றொரு வீரரான சத்யன் ஞானசேகரன் டேபிள் டென்னிஸ் பிரிவில் தேர்வாகியுள்ளார்.

இவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னாபிரிக்கா அணிக்கு 232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை…

wpengine

நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி

Azeem Kilabdeen

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய ஒப்பந்தம்; இளம் வீரர்கள் புறக்கணிப்பு (தொகை இணைப்பு)

wpengine