Top Story 1உள்நாட்டு செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்தயில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டறிய உதவுமாறு காணாமல் போன பெண்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளவர்களின் உதவியை காவல்துறையினர் நாடியிருந்தனர்.

இதற்கமைய இன்றைய தினம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.

Related posts

இலங்கை அணிக்கு எதிரான தொடரினை கைப்பற்றியது இந்தியா…

wpengine

பாகிஸ்தான் அணியின் பிரபல நட்சத்திர வீரர் சயிட் அப்ரிடியின் ஒப்பந்தக் காலம் நிறைவு..?

wpengine

சிசு மரணங்களை குறைப்பதில் இலங்கை முன்னேற்றம்

wpengine