உள்நாட்டு செய்திகள்

சஜின் வாஸினை சாதாரண சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு



நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை என வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதியாகியுள்ள நிலையில், அவரை உடனடியாக சாதாரண சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்படும் சிறைக்கு மாற்றுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) உத்தரவிட்டது.

ஜனாதிபதி செயலகத்திலுள்ள 16 வாகனங்களை சட்டவிரோதமாக பாவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தன, தனக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு சரும நோய் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் வைத்திய பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனைகளின் போது, சஜினுக்கு அவ்வாறானதொரு சரும நோய் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வைத்திய அறிக்கையை கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க, ‘உடனடியாக வாஸ் குணவர்தனவை சாதாரண சிறைக்கைதிகள் தடுத்து வைக்கப்படும் சிறைக்கு மாற்றுமாறு’ உத்தரவிட்டார்.

(riz)

 

 

 

Related posts

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

wpengine

அனர்த்தத்தினால் உயிரிழந்தோருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு…

wpengine

இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine