வணிகம்

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பண்டிகை காலத்திற்குப் பிறகு கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் என்று அனைத்து இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. அரசாங்கம் ஒப்புக் கொண்டபடி மக்காச்சோளம் உத்தரவாத விலையில் வழங்கப்பட்டால் விலை அதிகரிப்பு இருக்காது.

வர்த்தமானி அறிவிப்பின்படி கோழி இறைச்சியின் விலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தோல் உரிக்கப்படாத ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.430 ஆகவும், தோல் உரிக்கப்பட்ட கோழி இறைச்சி ரூ .500 ஆகவும் உள்ளது.

இருப்பினும், விலங்குகளின் தீவனத்திற்கு மக்காச்சோளம் பயன்படுத்தப்படுவதால் அதன் விலைகள் அதிகரித்து செல்வதால், எதிர்காலத்தில் கோழி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு..

கோழிப் பண்ணையாளர்கள் இறைச்சியின் விலையை நிலையாக பராமரிக்க வேண்டுமெனில், அவர்களிற்கு மக்காச்சோளத்தை ரூ .60 க்கு வழங்குமாறு கோரிக்கையினை முன்வைக்கிறேன்..” எனத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

COVID-19 க்கு பின்னர் மாணவர்களை தயார்ப்படுத்தும் SLIIT Biotechnology கற்கை

wpengine

டீசல் – பெற்றோல் இறக்குமதி ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

wpengine

வெடிபொருட்கள் – போதை பொருட்களை இனங்காண 02 ரோபோக்கள்

wpengine