உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 : ஜப்பான் கப்பலில் இரண்டு இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜப்பானின் யோகோகமா துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்ஸஸ் சொகுசு கப்பலில் இலங்கையர்கள் இரண்டு பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்று ஏற்படவில்லை என டோக்கியோவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த இருவரும் அந்த சொகுசு கப்பலின் பணிக்குழாம் உறுப்பினர்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இக் கப்பலில் உள்ளவர்கள் 14 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பணிக்குழாம் உறுப்பினர்கள் தொடர்ந்தும் கப்பலில் தங்கியிருக்க வேண்டும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது

Related posts

மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கும்…

wpengine

கட்டிட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine

Zam Zam நிறுவனத்துடன் கைகோர்த்து, எதிர்கால சந்ததியினருக்கு உதவும் திட்டத்திற்கு பங்களிப்போம்..!

wpengine