உள்நாட்டு செய்திகள்

கொழும்பு பயணித்த பேருந்து விபத்து – 21 பேர் காயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி விபத்துள்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிலாபம் மற்றும் முந்தலம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கலந்துரையாடல்

wpengine

கொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்து மட்டு

wpengine

சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் CID விசாரணை..

wpengine