வணிகம்

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்..



கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(15) ஆரம்பமாகிறது.

கொழும்பு பண்டரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 24ம் திகதி வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சர்வதேச புத்தக கண்காட்சியை 19 ஆவது வருடமாகவும் தொடர்ந்து இலங்கை புத்தக வெளியிட்டாளர் சங்கம் ஏற்பாடு செய்கிறது. இதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், விநியோக நிறுவனங்கள் அடங்கலாக 400க்கு மேற்பட்ட அமைப்புக்களின் காட்சிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Y19 ஐ அறிமுகம் செய்த vivo

wpengine

அரச ஊழியர்களின் அனர்த்த முகாமைத்துவத்திற்கு ஜப்பான் அரசு நிதியுதவி..

wpengine

72ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நாளை(12)..

wpengine