உள்நாட்டு செய்திகள்

கொரோனா : ரயில்வே ஊழியர்களிடையே கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே ஊழியர்களிடையே கொவிட்-19 தொற்றின் பரவல் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் இலங்கை ரயில்வே கடுமையான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்கள், கொவிட்-19 பரவுவதைத் தணிக்கவும் தடுக்கவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் வைரஸ் பரவுவது வேகமாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், ஏராளமான ஊழியர்கள் கொரோனா வைரஸால் பதிப்படையக் கூடும். மேலும் இது பயணிகளையும் அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் இலங்கை ரயில்வே தொழிற் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டது

wpengine

A/L சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

wpengine