கேளிக்கை

கொரோனாவிற்கு சவாலாக களமிறங்கும் நித்யானந்தா



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – கொரோனாவை ஒழிக்க நித்யானந்தா தனது காணொளியில் எளிய வழி ஒன்றை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகளவில் 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கும் பல நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை அழிக்க நித்தியானந்தா ஆலோசனை வழங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. தொடர்ந்து இடைவிடாமல் ‘ஓம் நித்தியானந்த பரமசிவோகம்’ என, பிரார்த்தனை செய்தால் கொரோனாவை அழிக்க முடியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நயனுக்கு நிச்சயதார்த்தம்

wpengine

“மூவர்” திரைப்படம் பெப்ரவரி 27 திரைக்கு…

wpengine

ட்ரம்ப் இனது புகைப்படத்தினை வைத்து இலங்கையின் படைப்பு… (VIDEO)

wpengine