உள்நாட்டு செய்திகள்

கொண்டயா தொடர்பான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு – நீதவான்



துனேஸ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு என கம்பஹா நீதவான் டிக்கிரி கே. ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வீடு ஒன்றில் புகுந்து நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியதாக கொண்டயா மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் கைது செய்யப்படும் எந்தவொரு நபரும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரையில் சந்தேக நபராகவே கருதப்படுகின்றார்.

சாட்சி கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை நடத்தப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை குற்றவாளியாக அடையாளப்படுத்த பொலிஸாருக்கு எந்த அதிகாரமுமில்லை.

ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை அறிக்கையிட உரிமையுண்டு.

சந்தேக நபர் தொடர்பில் ஊடகங்களில் பிரசூரமான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு சொல்ல வேண்டும் என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.

கொண்டயா தொடர்பில் கம்பஹா நீதிமன்றில் நேற்று வழக்கு ஒன்று விசாரணை நடத்தப்பட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.

கொண்டயாவிற்கு நேற்று பிணை வழங்கப்பட்ட போதிலும், பிணையில் எடுக்க எவரும் முன்வாரத காரணத்தினால் விளக்கமறியல் நீடிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

wpengine

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

wpengine

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

wpengine