உள்நாட்டு செய்திகள்

கொட்டதெனியாவ சிறுமியின் புகைப்பட,வீடியோக்களை பிரசுரிக்க வேண்டாம் – NCPA



கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை (12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைகளிலிருந்து சிறுமி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு, கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2010ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பிறந்த குறித்த சிறுமியின் 5ஆவது பிறந்த தினம், நாளை என்பது குறிப்பிடத்தக்கது.

(riz)

 

Related posts

மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை அசமந்தம்..

wpengine

சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் பயங்கரவாத தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது

wpengine

எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிலை கையாக மாறுகிறது..

wpengine