பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய பிடியாணை பிறப்பித்திருந்தார்.
இலஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு நீதிமன்றம் இத் தடையை விதித்திருந்தது.
இத் தடையை மீறியமை தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் முன்னிலையாகாத சந்தர்பத்தில் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, கலகொடஅத்தே ஞானசார தேரர் வெளிநாடு ஒன்றிற்கு விஜயம் செய்திருந்த தாக தெரியவந்தது. பின்னர் அவர் நாடுதிரும்பியதாகவும் அதன் பிரகு கைது கைது செய்யப்பட்டதாக தகவல் தெரியவருகின்றது.