உள்நாட்டு செய்திகள்

கேரள கஞ்சாவுடன் மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் – முந்தல் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றை, பாலாவி பகுதியில் சோதனைக்குட்படுத்தியபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படையினரால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றுக்கு

wpengine

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பகல் – இரவு டெஸ்ட் போட்டி…

wpengine

கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியில்

Azeem Kilabdeen