உள்நாட்டு செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம்…



(FASTNEWS|COLOMBO) தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 26ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இதன் காரணமாக, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வானிலை அவதான நிலையத்தினால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ , மத்திய , தென் , ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

´பொடி லெசி´ தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ஓட்டமாவடி – இறக்காமம் : கொவிட் சடலங்களை புதைக்க அனுமதி

wpengine

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சீர்த்திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு (Update).

wpengine