உள்நாட்டு செய்திகள்

குருநாகல் மேயர் உட்பட ஐவர் வெளிநாடு செல்ல தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பிடியாணையை நீடிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குருநாகல் நகரசபை தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குருநாகல் புவனேகபாகு மன்னர் கட்டடம் தகர்க்கப்பட்டமை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரவிக்கப்பட்டு குறித்த நபர்களை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Update – காமினி செனரத் உள்ளிட்டோர் விளக்கமறியலில்…

wpengine

இன்று முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுலுக்கு…

wpengine

சிலாபத்தில் யுவதி கடத்தல், மாத்தளையில் சிலர் கைது..!

wpengine