உள்நாட்டு செய்திகள்

குமார் குணரட்ணத்தின் விளக்கமறியல் நீடிப்பு



முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான குமார் குணரட்னம் எதிர்வரும் 30ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் குமார் குணரட்னத்தை சிறைச்சாலை அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, பதில் நீதவான் மாலினி ஜயவர்தன அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள குமார் குணரட்னம் வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 3ம் திகதி கேகாலை அங்குருவெல்லவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தப்பிச் சென்ற கைதி ஹெரோயினுடன் கைது

wpengine

மீண்டும் நாடு திரும்பிய 223 இலங்கையர்கள்!

wpengine

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine