ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குடும்பத் தகராறில் பெண் கொலை



கிரிஎல்ல – பகலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதன்போது மற்றுமொரு பெண் காயமடைந்து கிரிஎல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பகலகம – கரதன பகுதியைச் சேர்ந்த 47 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதான சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவரை இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

லசந்த விக்கிரமதுங்க வழக்கு – ஜனாதிபதிக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

wpengine

அண்ணன், தம்பி இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து 20 வயதான யுவதி

wpengine

அழகான பெண்கள் வேண்டும்: சர்வாதிகாரியின் சொகுசு வாழ்க்கை அம்பலம்

wpengine