உள்நாட்டு செய்திகள்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் விளக்கமறியல் நீடிப்பு…



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் உட்பட்ட 4 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03 திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று(20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவான் எம். கணேசராஜாவினால் குறித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்துக்குரியவர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 04 பேரும் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்

wpengine

போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு தயாராகும் ஜனாதிபதி ரணில்

News Editor

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

wpengine