உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – கிளிநொச்சியில் நேற்று முன்தினம் விபத்து இடம்பெற்ற பகுதியில், பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கிளிநொச்சி – முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts

500 மில்லியன் நட்டஈடு கோருகிறார் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ

wpengine

சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

wpengine

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி

wpengine