உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கிளிநொச்சி) – கிளிநொச்சி இரணைமடு பகுதியில் 5 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப் புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனை செய்த போது, 5 இலட்சத்திற்கு அதிக பெறுமதியான 50 கிராம் ஐஸ் போதைப் பொருளும் ஜிபிஎஸ் கருவி கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரான வாகன சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான வாகனமும் மற்றும் சாரதியும் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்…

wpengine

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

wpengine

காலநிலையில் மாற்றம்…

wpengine