உள்நாட்டு செய்திகள்

களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – மற்றுமொரு சந்தேக நபர் கைது…



களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் ஹிம்புட்டான பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைதுசெய்யப்படும் போது, துப்பாக்கி பிரயோகத்துக்கு பயன்படுத்தபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றுமொருவர் நேற்று(26) கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதாள உலகக் குழு நபரான சமயங், சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உட்பட ஏழு பேர் உயிரிழந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இன்று 09 மணிநேரம் நீர் விநியோகம் தடை…

wpengine

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

Azeem Kilabdeen

நூறு நாட்களை கடந்தும் திருப்தியில்லை

wpengine