உள்நாட்டு செய்திகள்

களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம்



(FASTNEWS|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதால் அதனை அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக புளத்சிங்கள, பாலிந்தநுவர, கிரியெல்ல, இங்கிரிய, மதுராவல ஆகிய பிரதேச செயலகங்களில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளது.

களுகங்கையில் இரத்தினபுரி நீர் அளவிடும் இடத்தில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தாலும், எல்ல மற்றும் மில்லகந்தை நீர் அளவிடும் இடங்களில் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

படகு கவிழ்ந்ததில் நால்வர் மாயம்..

wpengine

ஜனாதிபதியின் புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம்

wpengine

கொழும்பு ஆனந்த கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

wpengine