Top Story 2உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் பணி எதிர்வரும் நாட்களில் துரிதமாக மேற்கொள்ளப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

Related posts

இன்றும் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை..

wpengine

அரசியல் பழிவாங்கல் : அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்

wpengine

“மீள்குடியேற்ற விஷேட செயலணியில் கை வைத்தால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும்” – அமைச்சர் ரிஷாட் எச்சரிக்கை!

wpengine