உள்நாட்டு செய்திகள்

கம்மன்பிலவிற்கு நவம்பர் மாதம் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை.


பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பிலவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றினால் அழைப்பாணை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா பிரஜைக்கு உரித்தான தனியார் நிறுவனமொன்றின் பங்குகளை முறைகேடு செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டு உதய கம்மன்பிலவின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்தக் கொடுக்கல் வாங்கலினால் 20 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

UPDATE – நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் பாதையில் டயர்கள் எரிப்பு..

wpengine

அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்.

wpengine

நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்க முடியாது

Azeem Kilabdeen