உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கபீர் ஹஷீம் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்ற அழைப்பாணை



ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹஷீம் , தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) அழைப்பாணை விடுத்தது.

அது , அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும்.

குறித்த மனு மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் மே மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டு யானைகளுக்கு GPS கழுத்துப்பட்டி!

Azeem Kilabdeen

தீவிரம் அடையும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிப்பு..!

wpengine

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனு மீதான விசாரணை இன்று…

wpengine