உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வுகள் சுப நேரத்தில் ஆரம்பம்



(FASTNEWS | COLOMBO) – கண்டி எசல பெரஹரவின் ஆரம்ப நிகழ்வான கப் நடுகை செய்யும் பாரம்பரிய நிகழ்வு இன்று(02) அதிகாலை 05.10 மணியளவில் சுப நேரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு சுமார் 7000 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 7000 பொலிஸாரே இவ்வாறு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அவர்களுடன், இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இன்று இரவு வேளையில் மழை…

wpengine

16 மாவட்ட மக்கள் கடும் வறட்சி காரணமாக பாதிப்பு

wpengine

கொலை சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்…

wpengine