உலக செய்திகள்

கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதுடன், தொடர்ந்தும் மீட்பு பணி நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரட்டை குண்டுத் தாக்குதல்கள்..

wpengine

பாதுகாப்பு சுவர் எழுப்ப ட்ரம்ப் எதிர்ப்பு

wpengine

சூடான் அதிபரை நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்குமாறு தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

wpengine