உள்நாட்டு செய்திகள்

கட்டிடத்திலிருந்து வீழ்ந்த கடற்படை வீரர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பரோன் ஜயதிலக மாவத்தையில் பழுதுபார்க்கப்பட்டு வரும் கஃபூர் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து அவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை பொறியாளர்களால் இக்கட்டிடம் புதுப்பிக்கப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த கடற்படை வீரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்…

wpengine

பொகவந்தலாவ மலைத்தொடரில் தீ பரவல்

wpengine

கோட்டாபய ராஜபக்க்ஷ வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine