உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

UPDATE – சபாநாயகரின் பணிப்பினை புறக்கணித்து தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில்…



சபையில் இடம்பெற்ற அமைதியின்மையினை தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேறுமாறும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை சபையிலிருந்து வெளியேறுமாறு கூறிய போதிலும் தினேஷ் குணவர்தன அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

———————- UPDATE  13:45

விமல் வீரவங்ச உள்ளிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட முடியாது என சபநாயகர் இன்று(08) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் குறித்த இந்த அறிக்கையுடன், ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபையின் நடுப்பகுதிக்கு வந்ததால் தீவிர நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடாளுமன்றம், 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

சீமெந்து விலை அதிகரிப்பு?

wpengine

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களது உதவியின் போது

wpengine

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

wpengine