உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதிய ஒழிப்புக்கு எதிராக அரச அதிகாரிகள் நடவடிக்கை..



ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான அரசின் முயற்சிக்கு எதிராக அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அண்மையில் கூறிய கருத்தின்படி ஓய்வூதியத்தை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தெரிய வந்துள்ளதாக ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜானக துஷார கூறினார்.

தற்போது கூட அரச ஊழியர்கள் ஓய்வூதியங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கான திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்களை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் மூலம் ஓய்வூதியத்தை இல்லாமல் செய்யும் அரசின் திட்டத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ஓய்வூதிய பாதுகாப்புச் சேவை மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ஜானக துஷார மேலும் கூறினார்.

(rizmira)

Related posts

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..

wpengine

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

wpengine

நாடளாவிய ரீதியில் மது போதையில் வாகனம் செலுத்திய 6136 சாரதிகள் கைது

wpengine