உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) புத்தளம் – நில்லடிய பிரதேசத்தில் 6 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் போலோசாறினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிசாருக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து, 660 கார்ட்டில் அடைக்கப்பட்ட 6600 ரெமடோல் போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

புத்தளம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

தேசிய வீடமைப்புத்திட்ட நிகழ்வு இன்று பிரதமரின் தலைமையில்

wpengine

அமைச்சரவை மறுசீரமைப்பு – புதிய அமைச்சுப் பதவிகள் இதோ.. (update)

wpengine

பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் விசேட கோரிக்கை

wpengine