உள்நாட்டு செய்திகள்

ஒருகொடவத்தை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து…



ஒருகொடவத்தையில் தேயிலை விநியோகத்திற்காக பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து காரணமாக தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், தொழிற்சாலை அண்மையிலிருந்த 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பிரதேசவாசிகள் மற்றும் கிரண்டபாஸ் தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்,சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்..!

wpengine

லண்டன் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி…

wpengine

இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

wpengine