உள்நாட்டு செய்திகள்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் மஹிந்த தலைமையில் காலிமுகத் திடலில்…



ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டம் காலிமுகத் திடல் மைதானத்தில் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரபல திரைப்பட இயக்குனராக வசந்த ஒபேசேகரவின் உடல் நலம் விசாரிக்க தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத் திடலில் நடத்த அனுமதிக்கப்படாது என அமைச்சர் கபீர் ஹாசிம் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தமை குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதன் போது, “காலிமுகத் திடல் மைதானத்தை தருவதாக எமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் மே தினக் கூட்டத்தை நாம் அங்கு நடத்த உள்ளோம்” என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

ஒத்திவைப்பு விவாதம் நாளை

wpengine

மேலும் 6 மாதங்களுக்கு தடை நீடிப்பு

wpengine

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடனான காலநிலை..

wpengine