உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐஓசி எரிபொருள் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு…



இன்று(11) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

புதிய எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு வகையான எரிபொருட்களின் விலைகளை நேற்று(10) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

அதன்படி ஐஓசி நிறுவனமும் 95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்கப்படுவதுடன், யூரோ 04 வகையான சுப்பர் டீசல் 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 95 ஒக்டைன் பெற்றோல் 158 ரூபாவில் இருந்து 160 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 92 ஒக்டைன் பெற்றோல் விலையில் மாற்றங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மின் கட்டணத்தை 30% இனால் குறைக்க PUCSL கோரிக்கை

News Editor

அவன்ட் காட் நிறுவன தலைவரை கைதுசெய்ய இன்டர்போலின் உதவி நாடப்படும்

wpengine

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் 13 அன்று மாறுபடும் – வளிமண்டலவியல் திணைக்களம்.

wpengine