Top Story 3உள்நாட்டு செய்திகள்

எல்லவல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெல்லவாய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சிக்கு, மீள் அறிவித்தல் வரை சுற்றுலாப்பயணிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும், அவரது இரண்டு பிள்ளைகளும், எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றபோது உயிரிழந்தனர்.

இவ்வாறாக அண்மைக் காலமாக, எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணத்தைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், எல்லவல நீர்வீழ்ச்சியைப் பார்வையிட, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதாக வெல்லவாய பிரதேச செயலாளர் சந்தன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

குகுலே கங்கையின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது..

wpengine

ISIS இற்கு இணைந்துள்ள இலங்கையரது விவரங்கள் வெளிச்சத்திற்கு..

wpengine

இணைய பாவனையில் தகாத வார்த்தைப் பிரயோகமா.. இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்..

wpengine