ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எரிபொருள் விலைச் சூத்திரத்தில் மாற்றம்…?


எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தினை முன்வைக்க முன்னர் எரிபொருளுக்கான விலைச் சூத்திரத்தில் மாற்றம் ஒன்றினை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிவ்யோர்க் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி;

“.. எரிபொருள் விலைச் சூத்திரத்தினால் பொதுமக்கள் அதிகளவு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றனர். அது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஆதலால் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் எரிபொருள் விலைச் சூத்திரத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம்…” என தெரிவித்துள்ளார்.

Related posts

ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களை HIV பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தல்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் கம்பஹா பிரபலமொன்று மொட்டுடன் இணைவு…

wpengine

இரண்டு மணித்தியாலத்தில் 67 ஆயிரம் விருப்பங்களை அள்ளிய ஜனாதிபதியின் புகைப்படம்

wpengine