உலக செய்திகள்

எயார் இந்திய விமானங்களுக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹாங்காங்) – கொவிட்19 தொற்று அச்சுறுத்தலினால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் எயார் இந்திய விமானங்கள் ஹாங்காங் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொவிட் 19 ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விமான போக்குவரத்துகள் வழமைக்கு வந்திருந்தன.

இந்நிலையில் ஹாங்கங் நாட்டிற்கு வந்த 21 வெளிநாட்டு பயணிகளுக்கு கொவிட் 19 (கொரோனா) இருப்பது தெரிய வந்துள்ளது. அதில் மூன்றில் ஒரு பங்கு பயணிகள் எயார் இந்தியா விமான சேவை மூலம் ஹாங்காங் வந்துள்ளனர்

இதனால் எதிர்வரும் ஒக்டோபர் 8ம் திகதி வரை ஹாங்காங் வர எயார் இந்தியா விமானங்களுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் எயார் இந்தியா விமானத்தில் ஹாங்காங் செல்ல முற்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

Related posts

ஈரான் நாட்டுடனான தொடர்புகளை அறுத்து எறியுங்கள் – சிரியா தேசிய கூட்டணி கட்சி

wpengine

ஹொஸ்னி முபாரக் காலமானார்

wpengine

900 ஆண்டுகள் பழமையான மரப்பாலம் எரிந்து சாம்பல்

wpengine