உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கு அந்தமான் கடற்பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் வடமேல் திசையை நோக்கி செல்லக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலை எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வங்காள விரிகுடாவில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இதன் காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

wpengine

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்

wpengine

இனப்பிரச்சினைக்கு தீர்வும் அபிவிருத்தியில் தன்னிறைவு வேண்டும் – அமைச்சர் ரிஷாத்

wpengine