Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் 28 ஆம் திகதி சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெறும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.

இறுதிக் கிரியைகளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை 5.30 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (26) காலை 10.30 மணியளவில் புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்று (25) காலை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு கார் வீதியின் பாதுகாப்பு வேலியிலும், அதே திசையில் சென்ற கொள்கலன் பாரவூர்தியிலும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

காணாமல் போனோர் அலுவலகத்திற்கான உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை..

wpengine

போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் கைது

wpengine

சாதாரண தரப் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள்

wpengine