Top Story 3உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வீதி சமிஞ்சைகளில் பச்சை விளக்கு ஒளிரும் போது யாசகம் வழங்குவோர் மற்றும் சமிஞ்சைக்கட்டமைப்பு அருகில் பொருட் கொள்வனவில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வீதி சமிஞ்சைகளுக்கு அருகில் யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் யாசகத்தில் ஈடுபடும் பல யாசகர்கள் வியாபாரமாக அதனை மேற்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வியாபார நோக்கத்தில் யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லரை விலை அறிவிப்பு…

wpengine

UPDATE : சிலி 25ம் திகதி வரை விளக்கமறியலில்..

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா நோயாளர்கள் பதிவாகவில்லை

wpengine