வணிகம்

எகிறும் தங்கத்தின் விலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலர் என்ற வரம்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 டொலர்களை தாண்டக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 டொலர்களை தாண்டக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.

இந்த தொழிலைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்தை கோரியுள்ளனர். நாட்டில் இன்று ஒரு பவுண்டு தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூரை சேர்ந்த திறமையானவர்கள் இந்த தொழில்துறையை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.

இதனால், தரமற்ற நகைகள் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இலங்கை தேயிலையினை ஏற்க மறுக்கிறது ஜப்பான்….

wpengine

சந்தைக்கு அரிசியை நேரடியாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களை விஸ்தரிக்க நடவடிக்கை…

wpengine

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

wpengine