உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – கம்பஹா மாவட்டடத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் இன்று(09) திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று(09) காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8 .00 மணிவரையில் இந்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள கம்பஹா மாவட்டத்தின் சகல சதொச, கூட்டுறவு மற்றும் பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக 10 பேர் பலி – 5 பேரை காணவில்லை..!

wpengine

மறுக்கிறது பிரதமர் அலுவலகம்

News Editor

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

Azeem Kilabdeen