உள்நாட்டு செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 61,093 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 61,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 628 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 228 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17,172 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை…

wpengine

அலுகோசு பதவிக்கு மீண்டும் விண்ணப்பம் கோரல்…

wpengine

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஜனாதிபதி கிராமங்களுக்கு

wpengine