உள்நாட்டு செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவுக்கு…



கடந்த மார்ச் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளை(20) நிறைவடைகிறது.

இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அமர்வுகள் பிற்போடப்பட்ட ஹம்பாந்தோட்டை மாநகர சபை மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வர்த்தமானியில் வௌியிட தாமதமான பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை.

குறித்த இரண்டு சபைகளுக்கும் மேலதிகமாக இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

Related posts

நேற்றைய வெற்றியில் திருப்தியில்லை – தினேஷ் சந்திமால்..

wpengine

சிறைக் கைதிகள் 285 பேருக்கு விஷேட மன்னிப்பு..

wpengine

இந்திய அணிக்கு 217 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை..

wpengine