Uncategorized

உலகின் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கியது



உலகின் பெரிய விமானமான A- 380  ரக விமானம், இன்று முற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பாரிய விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவது இது, இரண்டாவது தடவையாகும் என்பதுடன் பகல் பொழுதில் தரையிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நோயால் பாதிக்கப்பட்ட குறித்த பயணி, சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பிரவுசர் செயலியை வைரஸ் புரோகிராம்கள் கைப்பற்றலாம்

wpengine

இலக்கை தொலைத்த முஸ்லிம் கட்சிகளும்.. எடுப்பார் கைப்பிள்ளையான முஸ்லிம் தேசியமும்.. முன்னாள் அமைச்சர் எம். எச்.சேகு இஸ்ஸடீன்

wpengine

சந்திரனில் நிலநடுக்கமா..

wpengine