Top Story 1உள்நாட்டு செய்திகள்

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்..!

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”இது முஸ்லீம்களிற்கு எதிரான நடவடிக்கை இந்த நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது. அது மீண்டும் நிகழ்கின்றது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

லிந்துலை நகர சபையின் தலைவர் உட்பட 4 பேர் கைது…

wpengine

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் அவசரக் கூட்டம் இன்று

wpengine

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரச உடைமையாக்குவதற்கு அரசு தீர்மானம்..

wpengine