உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம்பெறவுள்ளது. மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர்.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது.

அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

Related posts

திலின கமகேவை நீதிமன்றில் ஆஜர்படுத்த CIDக்கு சட்டமா அதிபர் ஆலோசனை

wpengine

2011 ஆட்ட நிர்ணயம் : வீரர்கள் குறித்து எந்த ஆதாரமும் இல்லை

wpengine

ஆத்மீக பணியில் ஈடுபடுபவர்களை வீணாக விமர்சித்து இனவாதிகளுக்கு தீனி போடாதீர்கள்! – ரிஷாத் பதியுதீன்

wpengine